தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

கைதிகளால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

கைதிகளால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கொலை மற்றும் குற்றச் சம்பவங்களால் குடும்பத் தலைவர் அல்லது முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்து வருவாய்க்கு வழியின்றி தவிக்கும் குடும்பங்கள், உடல் ஊனமடைந்து பொருளீட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு, சிறை கைதிகளால் பாதிக்கப்பட்டோர் நல நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

 இதில், சம்பந்தப்பட்ட கைதி சிறைக்குள் செய்யும் பணிக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அவரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.

அதன்படி, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 27 குடும்பங்களை சேர்ந்த 31 நபர்களுக்கு நிவாரணமாக ரூ.15 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற்றனர்.

மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் நிவாரண உதவித்தொகைகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், சிறைத்துறை கண்காணிப்பாளர் குமரேசன், மண்டல நன்னடத்தை அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.