மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாஜக மாணவர் அமைப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் எதிரே பாஜகவின் அகில வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் (ஏபிவிபி), கேரள முதல்வரின் உருவப் படத்தை எரித்தும்,

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:58 am

தினமணி

சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் எதிரே பாஜகவின் அகில வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் (ஏபிவிபி), கேரள முதல்வரின் உருவப் படத்தை எரித்தும், அந்தக் கட்சிக் கொடியை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏபிவிபியினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடலூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நகரச் செயலர் வி.சுப்புராயன் தலைமை வகித்தார்.
 மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் கோ.மாதவன், பி.கருப்பையன். ஒன்றியச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணன், சிப்காட் செயலர் ஆர்.ஆளவந்தார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.அமர்நாத், ஜெ.சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதேபோல, விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலர் அசோகன் தலைமை வகித்தார். சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சிதம்பரத்தில்...
 சிதம்பரம் காந்திசிலை அருகே புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கட்சியின் நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், ராஜா, வாஞ்சிநாதன், கலியமூர்த்தி, அமுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பாஜகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
 நெய்வேலியில்...
 இதேபோல, நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முத்துவேல் தலைமை வகித்தார். நெய்வேலி நகரச் செயலர் எஸ்.திருஅரசு, சிஐடியு பொதுச் செயலர் டி.ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன், மாவட்டக் குழு உளுப்பினர் எம்.மீனாட்சி நாதன், நகரக் குழு உறுப்பினர்கள் மணிமாறன், முருகன், கார்த்திகேயன், மணி, மாதர் சங்கத் தலைவி தனம், செயலர் மாதவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.