எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பெயர் பதிவு: தினமணி செய்தி எதிரொலி

கடலூர் மாவட்டத்தில் கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்திலும், கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில்

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:19 am

தினமணி

கடலூர் மாவட்டத்தில் கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்திலும், கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் பொது சேவை மையம் மூலமும் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகளைப் பதிவு செய்து, அதற்கான ரசீதுகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை வழங்கினார்.
 கடலூர் மாவட்டத்தில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கு நவம்பர் 30- ஆம் தேதி கடைசி நாளாகும்.
 வங்கிகள், கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்படும் நிலையில், கடன் பெறாத விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சேர்க்காமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
 இதுதொடர்பான விரிவான செய்தி நவம்பர் 14- ஆம் தேதி தினமணியில் வெளியானது. இந்த நிலையில், கடன் பெறாத விவசாயிகளைப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யும் பணி கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான ரசீதுகளை வழங்கினார்.
 தொடர்ந்து, கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் பொது சேவை மையம் மூலம் பதிவு செய்த விவசாயிகளுக்கும் அதற்கான ரசீதுகளை ஆட்சியர் வழங்கினார்.
 பின்னர், அவர் கூறியதாவது: விவசாயிகள் அனைவரும் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நவம்பர் 30- ஆம் தேதிக்குள் பதிவுகள் செய்ய வேண்டும். மாவட்டதில் இதுவரையில் 8 ஆயிரம் பேர் பிரீமியத் தொகை கட்டியுள்ளனர்.இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த சம்பா நெல் பயிரில் மகசூல் பாதிப்பு ஏற்பட்ட கிராம விவசாயிகளுக்கு வங்கிகள், கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் இதுவரை ரூ. 88 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
 கடலூர் மாவட்டத்தில் உள்ள 168 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், 85 பொது சேவை மையங்கள், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
 பயிர்க் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 வேளாண் இணை இயக்குநர் நாட்ராயன், துணை இயக்குநர்கள் ஆர்.சம்பத்குமார், வ.கனகசபை, உதவி இயக்குநர்கள் சு.பூவராகன், பாலசுப்ரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி, துணைப் பதிவாளர் கா.சுந்தர், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் டி.தனராஜன், கரைமேடு கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் ஆர்.பிரபாகரன், செயலர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.