விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசுக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசப் பேருந்து அட்டை வழங்கக் கோரி,

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:19 am

தினமணி

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசப் பேருந்து அட்டை வழங்கக் கோரி, வகுப்புகளைப் புறக்கணித்து புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசுக் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படாததைக் கண்டித்து, புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பின்னர், கல்லூரி எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கே.அம்பேத்கர் மற்றும் போலீஸார் அங்கு வந்து மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
 போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளரை தொடர்பு கொண்டு பேசி வருகிற 30-ஆம் தேதி வரை பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.