பண்ருட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி காவல் சரகப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் புதுப்பேட்டை மற்றும் காடாம்புலியூர் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எஸ்.ஏரிப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கு சாராயம் விற்ற தாமரை(27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, சேமக்கோட்டை ஏரிக்கரையில் சர்க்கரை(75) என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடம் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

