திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நெய்வேலியில் திருப்புகழ் மாநாடு

நெய்வேலி சிவனடியார்கள் திருக்கூட்டம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், திருப்புகழ் மாநாடு வேலுடையான்பட்டு கோயில் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:32 pm

நெய்வேலி சிவனடியார்கள் திருக்கூட்டம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், திருப்புகழ் மாநாடு வேலுடையான்பட்டு கோயில் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. 
மாநாட்டுக்கு, என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் செல்வக்குமார் தலைமை வகித்தார். திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, திருப்புகழ் மாநாட்டை தொடக்கி வைத்தார்.  
என்எல்சி நிறுவன முதன்மைப் பொது மேலாளர் ரா.மோகன் முன்னிலை வகித்தார். நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகச் செயலர் ச.திருஞானசம்பந்தமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய நிறுவனர் ஊரன்  அடிகளார் நிரைவுரை வழங்கினார்.
நிகழ்வில், செந்தமிழ், அரசு, கி.சிவக்குமார், வலையப்பேட்டை கிருஷ்ணன், நெய்வேலி சிவ கண முருகப்பன், விருத்தாசலம் முனைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சொற்பொழிவாற்றினர். 
திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.