புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நெய்வேலியில் திருப்புகழ் மாநாடு

நெய்வேலி சிவனடியார்கள் திருக்கூட்டம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், திருப்புகழ் மாநாடு வேலுடையான்பட்டு கோயில் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:32 pm

நெய்வேலி சிவனடியார்கள் திருக்கூட்டம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், திருப்புகழ் மாநாடு வேலுடையான்பட்டு கோயில் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. 
மாநாட்டுக்கு, என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர் செல்வக்குமார் தலைமை வகித்தார். திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, திருப்புகழ் மாநாட்டை தொடக்கி வைத்தார்.  
என்எல்சி நிறுவன முதன்மைப் பொது மேலாளர் ரா.மோகன் முன்னிலை வகித்தார். நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகச் செயலர் ச.திருஞானசம்பந்தமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய நிறுவனர் ஊரன்  அடிகளார் நிரைவுரை வழங்கினார்.
நிகழ்வில், செந்தமிழ், அரசு, கி.சிவக்குமார், வலையப்பேட்டை கிருஷ்ணன், நெய்வேலி சிவ கண முருகப்பன், விருத்தாசலம் முனைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சொற்பொழிவாற்றினர். 
திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.