
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்கள் தேசியக் கொடியேற்றினர்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, பொது தீட்சிதர்கள் புதன்கிழமை காலை 6 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர். பின்னர், மேளதாளங்கள் முழங்க தேசியக் கொடி எடுத்துச் செல்லப்பட்டு, கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ச்சியாக நடராஜர் கோயிலில் பாரம்பரியத்துடன் பொது தீட்சிதர்கள் சார்பில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





