பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

மண்டல அளவிலான பேச்சுப் போட்டி

கடலூர் மண்டல மறுமலர்ச்சி திமுக மாணவரணி சார்பில் பெரியார், அண்ணா குறித்த மண்டல அளவிலான பேச்சுப்போட்டி கடலூரில் ஞாயிற்றுக்கிழமை

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:00 am IST

கடலூர் மண்டல மறுமலர்ச்சி திமுக மாணவரணி சார்பில் பெரியார், அண்ணா குறித்த மண்டல அளவிலான பேச்சுப்போட்டி கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டிக்கு மண்டல பொறுப்பாளர் இராச.எழிலன் தலைமை வகித்தார். இந்தப் போட்டியில், கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுவை மாநிலத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற தலா 3 பேர் வீதம் மொத்தம் 18 பேர் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலர்கள் ஜெ.ராமலிங்கம் (கடலூர் வடக்கு), ஏ.என்.குணசேகரன் (கடலூர் தெற்கு), வீ.பாபுகோவிந்தராஜ் (விழுப்புரம் வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஏ.கே.மணி பேச்சுப் போட்டியை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை அரசியல் ஆய்வு மைய செயலர் மு.செந்திலதிபனும், நடுவர்களுக்கான பரிசை கழக அமைப்புச் செயலர் ஆ.வந்தியத்தேவனும் வழங்கி சிறப்புரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.