மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம் 

கடலூர் முதுநகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:15 am

தினமணி

கடலூர் முதுநகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 "முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதா' என்ற பெயரில் முஸ்லிம் தனியார் சட்டத்தை அழிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சார்பில், கடலூர் முதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் எம்.ஏ.ஹமீதுஃப்ரோஜ் தலைமை வகித்தார்.
 மாநிலச் செயலர் ஜி.அப்துல்சத்தார், தேசிய பெண்கள் முன்னணியின் மாநிலச் செயலர் எம்.தஸ்லீமா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
 கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.மக்புல்அஹமது, துணைத் தலைவர் ஐ.ஷர்புதீன், பொருளாளர் ஏ.முகமதுஹனிப், நகரத் தலைவர் எம்.ஐ.அப்துல்ரஹிம், துணைத் தலைவர் பி.ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டச் செயலர் எம்.முஜிபுர்ரஹ்மான் வரவேற்றார். நகரச் செயலர் ஏ.ஜெ.வஜ்ஹூல்லா நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.