தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

லாரி மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 2 -ஆக உயர்வு 

மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்ததால், சாவு எண்ணிக்கை 2-ஆக உயந்தது. 

Updated On :29 மார்ச் 2018, 3:13 am

மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்ததால், சாவு எண்ணிக்கை 2-ஆக உயந்தது.
 கடலூர் துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் விமல் (32). செவ்வாய்க்கிழமை மாலை தனது சகோதரி தென்றல் (34), அவரது மகன் நவிலன் ஆகியோருடன் கடலூரிலுள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
 கடலூர் அருகே உள்ள செல்லங்குப்பம் வந்த போது, அந்த வழியாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
 இந்த விபத்தில் விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவிலன், தென்றல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 இதில், தென்றல் புதன்கிழமை உயிரிழந்தார். இந்த மினி லாரி இரு ஆட்டோக்கள், ஒரு கார் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
 இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.