புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

லாரி மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 2 -ஆக உயர்வு 

மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்ததால், சாவு எண்ணிக்கை 2-ஆக உயந்தது. 

Updated On :29 மார்ச் 2018, 3:13 am

மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்ததால், சாவு எண்ணிக்கை 2-ஆக உயந்தது.
 கடலூர் துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் விமல் (32). செவ்வாய்க்கிழமை மாலை தனது சகோதரி தென்றல் (34), அவரது மகன் நவிலன் ஆகியோருடன் கடலூரிலுள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
 கடலூர் அருகே உள்ள செல்லங்குப்பம் வந்த போது, அந்த வழியாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
 இந்த விபத்தில் விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவிலன், தென்றல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 இதில், தென்றல் புதன்கிழமை உயிரிழந்தார். இந்த மினி லாரி இரு ஆட்டோக்கள், ஒரு கார் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
 இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.