மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கலப்பு திருமணம் புரிந்தோர் அரசு உதவித் தொகைக்குவிண்ணப்பிக்கலாம்

கலப்புத் திருமணம் செய்தவர்கள் அரசின் உதவித் தொகை கோரி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.

Updated On :14 மே 2018, 10:50 pm

கலப்புத் திருமணம் செய்தவர்கள் அரசின் உதவித் தொகை கோரி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சமூகநீதி மற்றும் தன்மேம்பாடு அமைச்சகம், அம்பேத்கர் நிறுவனத்தின் மூலம் சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த கலப்புத் திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளும் இதர வகுப்பினருக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.2.50 லட்சம் நிதி உதவி வழங்கி மாநில அரசின் மூலம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மனுதாரர் மனுவுடன் கல்விச் சான்று, மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும், திருமண அழைப்பிதழ், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய கலப்பு திருமணச் சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட கலப்பு திருமணச் சான்று, அரசு பதிவு பெற்ற வழக்குரைஞரிடம் ரூ.10-க்கான ஆணை பத்திரம் அசல், முதல் திருமணச் சான்று, திருமண பதிவுச் சான்று, மனுதாரர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், மக்களவை அல்லது சட்டப் பேரவை உறுப்பினர் பரிந்துரைக் கடிதம், வங்கியில் இருவரும் சேர்ந்து தொடங்கப்பட்ட கூட்டு வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
சட்டப்படியான திருமண வயது உடையவர்கள், கலப்பு திருமணமான ஒரு ஆண்டுக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.