கடலூர் நகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் அமைக்கக் கூடாதென நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் பாரதி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் விளம்பரப் பதாகை வைத்த இளைஞர் அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில், கடலூர் நகராட்சி ஆணையர்
க.சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் நகராட்சிப் பகுதிகளில் சாலையின் ஓரம், சாலையின் நடுப் பகுதி தடுப்புச் சுவர், மின் விளக்கு கம்பங்களில் விளம்பரப் பலகைகளை அனுமதியில்லாமல் வைக்கக் கூடாதென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அனுமதி பெற்று விளம்பரங்கள் செய்திருப்பவர்கள் ஒரு வாரத்துக்குள் உரிய உத்தரவு நகலை நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை மூலமாக குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். மேலும், விளம்பரங்களை அகற்றுவதற்கான முழுச் செலவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுமென அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

