தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அமமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
பெண்ணாடத்தை அடுத்த தொளார் கிராமம், பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). கடந்த வியாழக்கிழமை இரவு இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகிலுள்ள மணிவாசகம், சுப்பிரமணியன், செல்லம்மாள், லோகநாதன், பிச்சைபிள்ளை, மகேஸ்வரி, மாயவேல் ஆகியோரது வீடுகளிலும் தீ பரவியது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் பாலமுருகன், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். அப்போது, மாவட்ட அவைத் தலைவர் கலையரசன், பேரவை மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலர் ரத்தினசபாபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

