விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இமாம்ஸ் கவுன்சில் தெருமுனைக் கூட்டம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மங்கலம்பேட்டையில், "வாருங்கள் ஒன்றிணைந்து தேசம் காப்போம்' என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:58 am IST

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மங்கலம்பேட்டையில், "வாருங்கள் ஒன்றிணைந்து தேசம் காப்போம்' என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
 அமைப்பின் மாவட்டச் செயலர் மவ்லவி முஹம்மது தையிப் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாஅத் நகரத் தலைவர் அப்துல் பாரி, கீழவீதி பள்ளிவாசல் தலைவர் அப்துல் கனி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ஹஸனி, மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது அப்துல் கனி, மாவட்ட பொருளாளர் அலி பாதுஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக ஊடக மைய மாநில துணைச் செயலர் ராஜ்குமார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலர் மங்காப்பிள்ளை ஆகியோர் பேசினர்.
 ஜமாஅத்துல் உலமா சபையின் விருத்தாசலம் வட்டார பொருளாளர் மவ்லவி.ஹபீப் முஹம்மது, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அன்வர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலர் இக்பால், கோவிலானூர் பங்குத் தந்தை ஆண்ட்ரூஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இளைஞரணி செயலர் சுஜாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கவுன்சில் நகரத் தலைவர் மவ்லவி சிக்கந்தர்ராஜா வரவேற்க, நகரச் செயலர் முஹம்மது ஹனிப் நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.