இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

போக்சோ சட்டத்தில் பள்ளி ஆசிரியர் கைது

நெய்வேலியில் மாணவியை செல்லிடப்பேசியில் படம் பிடித்த கேந்திரிய வித்யாலய பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

Updated On :5 நவம்பர் 2018, 8:47 am IST

நெய்வேலியில் மாணவியை செல்லிடப்பேசியில் படம் பிடித்த கேந்திரிய வித்யாலய பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
 நெய்வேலி, வட்டம் 3-இல் உள்ள இந்தப் பள்ளியில் வட மாநிலத்தைச் சேர்ந்த நயன்பிநாக்கர் (32) என்பவர் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை மிரட்டி தனது செல்லிடப்பேசியில் படம் பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, சனிக்கிழமை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்த மாணவி ஒருவரை மிரட்டி தனது செல்லிடப்பேசியில் படம் எடுத்தாராம்.
 இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு வந்து ஓவிய ஆசிரியரை தாக்கினர். பின்னர் அவரை நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்த செல்லிடப்பேசியை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் மாணவிகளின் படம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் நயன்பிநாக்கரை சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.