கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் கடலூர் நகர அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மு.மருதவாணன் சிறப்புரையாற்றினார். பின்னர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சங்கத்தின் 5-ஆவது மாநாடு வருகிற 13-ஆம் தேதி கடலூரில் நடைபெறுகிறது. இதில், நகரின் வளர்ச்சி தொடர்பான 30 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். மாநாட்டில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்றனர். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக தேவி கே.பசுவலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!

”எடப்பாடியார் பதில் சொல்லியே ஆகணும்!” பிரேமலதா விஜயகாந்த் | ADMM
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


