பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குடியிருப்போர் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் கடலூர் நகர அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:21 am IST

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் கடலூர் நகர அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மு.மருதவாணன் சிறப்புரையாற்றினார். பின்னர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சங்கத்தின் 5-ஆவது மாநாடு வருகிற 13-ஆம் தேதி கடலூரில் நடைபெறுகிறது. இதில், நகரின் வளர்ச்சி தொடர்பான 30 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். மாநாட்டில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
 தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்றனர். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக தேவி கே.பசுவலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.