நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாலையில் நாற்று நடும் போராட்டம்

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 9:16 am IST

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
 காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்துக்கு உள்பட்ட புது காலனி தெருவில், 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 இந்தத் தெருவில் முறையான சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
 எனவே, புதிய சாலை வசதி செய்துதரக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், தொடர் மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதையடுத்து அந்தச் சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.