பெண் மர்மச் சாவு தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.சுரேஷ். இவருக்கும், அருகிலுள்ள பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் கற்பகவள்ளி (22) என்பவருக்கும் 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் கற்பகவள்ளி சடலமாகக் கிடந்தார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து, கற்பகவள்ளியின் தாய் ஜோதி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியர் ச.சந்தோஷினி சந்திராவும் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

