பெண் மர்மச் சாவு தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.சுரேஷ். இவருக்கும், அருகிலுள்ள பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் கற்பகவள்ளி (22) என்பவருக்கும் 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் கற்பகவள்ளி சடலமாகக் கிடந்தார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து, கற்பகவள்ளியின் தாய் ஜோதி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியர் ச.சந்தோஷினி சந்திராவும் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

