தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் ஆய்வு

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு மகளிர் மற்றும் ஆண்கள் தொழில்பயிற்சி நிலையங்களில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:18 am

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு மகளிர் மற்றும் ஆண்கள் தொழில்பயிற்சி நிலையங்களில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
 தொழில்பயிற்சி நிலையங்களில் ஆவணங்களை ஆய்வு செய்த அவர், மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளையும் பார்வையிட்டார்.
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கமான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். தொழில்பயிற்சி நிலையம் அமைந்துள்ள பகுதியில் தீபன் நகருக்குச் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சாலையானது தொழில்பயிற்சி நிலையத்துக்குச் சொந்தமான பகுதியில் அமைய உள்ளது.
 இதுதொடர்பாக கேட்டபோது, தொழில்பயிற்சி நிலையம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜோதி நிர்மலாசாமி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.