நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தமிழக பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தல்

தமிழக பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்கப்பட  வேண்டும் என தமிழ்ச் தேசியப் பேரியக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.  

Updated On :13 பிப்ரவரி 2019, 9:44 am IST

தமிழக பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்கப்பட  வேண்டும் என தமிழ்ச் தேசியப் பேரியக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.  
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் "தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா'  சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, அமைப்பின் பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் ஆற்றிய விழா நிறைவுப் பேருரை: வள்ளலாரின் சிந்தனைகள் மனித குலத்துக்கு தற்போது மிகவும் தேவை. மெய்யியல், மருத்துவம், மொழியியல் உள்ளிட்ட பல துறைகளில் அவர் ஆழ்ந்த அறிவுள்ளவராகத் திகழ்ந்தார். சிந்தனையாளராக மட்டுமின்றி, மிகச் சிறந்த கவிஞராக விளங்கினார். தமிழக பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
விழாவில், "வள்ளலார் வழி தமிழர் இறைநெறி' என்ற தலைப்பில் இறைநெறி இமயவனும், "வள்ளலார் வழி தமிழர் மருத்துவம்' என்ற தலைப்பில் மருத்துவர் தி.தெட்சிணாமூர்த்தியும் சிறப்புரையாற்றினர். விழாவில் தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது வழங்கப்பட்டது. வள்ளலாரின் நெறிகளை பரப்பி வரும் காட்டுமன்னார்கோவில் வள்ளலார் வழிபாட்டு மன்றத் தலைவர் சிவ.சிவ.ரங்கநாதனுக்கு "வள்ளலார் திருத்தொண்டர்' விருதும், திருக்குறள் ஒப்பித்தலில் சிறந்து விளங்கும் அரியலூர் மாணவி செல்வி கு.பத்மபிரியாவுக்கு "இளம் சாதனையாளர்' விருதும், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சக்தி ரா.நடராஜனுக்கு "நாட்டியாஞ்சலி செம்மல்' விருதும் வழங்கப்பட்டது. பேரியக்க சிதம்பரம் நகரச் செயலர் ரா. எல்லாளன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா, ச.மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர். 
தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் மல்லர் கம்பம், வீரவிளையாட்டுக் கலைகளை அரங்கேற்றினர். செல்வன் தி.ரா.அறன்  திருவருள்பா ஓதினார். மாணவி மோனிகா திருவருள்பா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலர் ஆ.குபேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிவ.அருளமுதன் நன்றி கூறினார். விழாவில், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.