குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழக ரயில் நிலையங்களில் என்எல்சி சார்பில் நவீன கழிப்பறை: மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் 200 ரயில் நிலையங்களில் என்எல்சி சார்பில் நவீன கழிப்பறைகள் கட்டும் திட்டத்துக்கு ரயில்வே துறை அமைச்சர்

Updated On :25 பிப்ரவரி 2019, 9:46 am IST

தமிழகத்தில் 200 ரயில் நிலையங்களில் என்எல்சி சார்பில் நவீன கழிப்பறைகள் கட்டும் திட்டத்துக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 200 ரயில் நிலையங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 ரயில் நிலையங்களில்  நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. 
இந்தப் பணிகளை  என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
 இதில் ஆண்கள், பெண்களுக்கு தலா 3 கழிப்பறைகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு கழிப்பறையும் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஆண்கள் கழிப்பறையில் தானியங்கி முறையில் ஆணுறைகள் வழங்கும் இயந்திரமும், பெண்கள் கழிப்பறையில் தானியங்கி முறையில் நாப்கின் வழங்கும் இயந்திரமும், நாப்கினை மின்சாரம் மூலம் எரிக்கும் இயந்திரமும் அமைக்கப்பட உள்ளன.
 இந்தத் திட்டத்துக்கானஅடிக்கல் நாட்டு விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவில், ரயில்வே மற்றும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.  
நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.