குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும்'

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டத்தின்

Updated On :25 பிப்ரவரி 2019, 9:46 am IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேட்டுக் கொண்டார்.
7 பேரின் விடுதலை தொடர்பாக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து அற்புதம்மாள் ஆதரவு திரட்டினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசு விதி எண் 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு ஆளுநருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்களாகியும் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே ஆளுநரை சந்தித்து வலியுறுத்திய நிலையில், மீண்டும் அவரைச் சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே, மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன்.
இதுதொடர்பாக, மார்ச் 9-ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் சட்டத்தை மதித்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
மும்பை குண்டுவெடிப்பில் 254 பேர் உயிரிழந்த வழக்கில் கைதான திரைப்பட நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சிபிஐ விசாரித்த அந்த வழக்கில், அந்த மாநில ஆளுநரே அவரை விடுதலை செய்தார். ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறொரு சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சட்டப்படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம் என்றார் அற்புதம்மாள்.
ஆதரவு கோரும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த மு.மருதவாணன், 
தி.ச.திருமார்பன், வெண்புறா சி.குமார், வ.கடல்தீபன், புஷ்பராஜ், எஸ்.என்.கே.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.