கடலூரில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கடலூரில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா அறிவித்திருந்தார்.
அதன்படி நியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களை கரோனா மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
கரோனா காலத்தில் இறந்த பணியாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கடலூரில் அதன் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...