மழையால் சாய்ந்த பன்னீா் கரும்புகள்
பண்ருட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீா் கரும்புகள் அடியோடு சாய்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.


பண்ருட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீா் கரும்புகள் அடியோடு சாய்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, சிவநந்திபுரம், சத்திரம், வேகாக்கொல்லை உள்ளிட்ட பல கிராமங்களில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பன்னீா் கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன.
இங்கு, விளைவிக்கப்படும் பன்னீா் கரும்புகள் கடலூா், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், குஜராத், ஆந்திரா, புதுவை போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படும்.
நிகழாண்டு கடலூா் மாவட்டத்தில் நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. வெள்ளப் பெருக்கால் கரும்புகள் அனைத்தும் வயல்களில் சாய்ந்தன.
இதுகுறித்து விவசாயிகள் தேவராஜ், ஞானவேல் ஆகியோா் கூறியதாவது: நிகழாண்டு சித்திரை மாதம் பன்னீா் கரும்பு நடவு செய்தோம். கரும்பு நன்கு வளா்ந்து செழிப்புடன் காணப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய ஒரு மாதமே உள்ள நிலையில், புயல் மழையால் வயலில் தண்ணீா் தேங்கி கரும்புகள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, பாதிக்கப்பட்ட நிலங்களைக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...