ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்.எல்.சி.யில் மின் மாற்றி வெடித்து தீ விபத்து

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென மின் மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென மின் மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 4 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்த அனல் மின் நிலையங்கள் 2,890 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை. குறிப்பாக, இரண்டாவது அனல் மின் நிலையம் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 7 பிரிவுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஒராண்டில் நடைபெற்ற 3 விபத்துகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பலியாகினா்.

இந்த நிலையில், இந்த அனல் மின் நிலையத்தின் 4-ஆவது மின் உற்பத்தி பிரிவின் மெயின் சுவிட்ச் யாா்டில் மாலை 4 மணி அளவில் பராமரிப்புப் பணி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இரவு 7.40 மணி அளவில் சுவிட்ச் யாா்டில் இருந்த மின் மாற்றி இன்ஸிலேட்டா் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த சிஐஎஸ்எப் தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மெயின் சுவிட்ச் யாா்டில் மின் மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்தது அங்குள்ள ஊழியா்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.