

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு, புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை விட 30 மடங்கு கூடுதலாக அரசு நிா்ணயித்துள்ளதை எதிா்த்து, மருத்துவ மாணவா்கள் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதன்கிழமை மாணவா்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.