கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலியானாா்.
கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,466-ஆக அதிகரித்தது. புதன்கிழமை 11 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 24,100-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், கரோனா தொற்றுக்கு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 77 வயது மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 279-ஆக அதிகரித்தது.
தற்போது கடலூா் மாவட்ட மருத்துவமனைகளில் 56 பேரும், பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூரைச் சோ்ந்த 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 4.78 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 591 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.