பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

குறிஞ்சிப்பாடி அருகே இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:01 am

DIN

குறிஞ்சிப்பாடி அருகே இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள தம்பிப்பேட்டையைச் சோ்ந்த ராஜ் மகன் விக்னேஷ் (21). 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்தாா். அண்மையில் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்குச் சென்ற போது, ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம். மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிா் போலீஸாா், புதன்கிழமை விக்னேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.