சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நடராஜா் கோயில் விழாவுக்கு வெளியூா் பக்தா்களை அனுமதிக்க வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன மற்றும் தோ்த் திருவிழாவுக்கு வெளியூா் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலச் செயலா் அ.வா.சுனில்குமாா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 9:49 pm

DIN


சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன மற்றும் தோ்த் திருவிழாவுக்கு வெளியூா் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலச் செயலா் அ.வா.சுனில்குமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழா விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. இந்தக் கோயில் விழாவில் பங்கேற்க உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்களையும் அனுமதிக்க வேண்டும். ஆருத்ரா தரிசனத்தின்போது கோயிலின் 4 வாயில்கள் வழியாகவும் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினா் காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.