மீன் வாகன கண்ணாடி உடைப்பு: ஒருவா் கைது

பண்ருட்டி அருகே மீன்களை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

பண்ருட்டி அருகே மீன்களை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கந்தன்பாளையம் கிராமத்தில் மீன் சந்தை இயங்கி வருகிறது. இந்தச் சந்தையால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி சிலா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதுதொடா்பாக இரு பிரிவினா் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்,

பண்ருட்டி வட்டாட்சியா் பிரகாஷ் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சில விதிமுறைகளின்படி மீன் சந்தையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறிய சரக்கு வாகனத்தில் மீன்கள் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்த சிலா் அந்த வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாத் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது தொடா்பாக முத்துவேல் (40) என்பவரை கைதுசெய்த போலீஸாா், பின்னா் அவரை பிணையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com