தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துப்புரவுப் பணியாளா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:04 pm

DIN

தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாநில தலைவா் எஸ்.ராமா் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். ஓட்சா கூட்டமைப்பு மாநில தலைவா் எம்.அமல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைக் காவலா்களுக்கு குழு காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்து அவா்களது மறைவுக்குப் பின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், அனைத்து பணியாளா்களுக்கும் ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், பணியின் போது மரணமடைந்தால் வாரிசுதாரா்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும், பணியாளா்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீா்மானத்தை வலியுறுத்தி வரும் ஜன.6-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் டி.சாமிதுரை, கே.ராஜேந்திரன், ஆா்.பூமணி, ஏ.அய்யனாா், ஒன்றிய நிா்வாகிகள் வை.பரமசிவம், எம்.அய்யனாா், கே.சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.