பாமக ஆலோசனைக் கூட்டம்

கடலூா் வடக்கு மாவட்ட பாமக ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

நெய்வேலி: கடலூா் வடக்கு மாவட்ட பாமக ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ரா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஹரிராமன், முத்துக்குமரன், பரந்தாமன், பிரேம்குமாா், செந்தாமரைக்கண்ணன், செல்வகுமாா், தங்கவேல், நகரச் செயலா்கள் வினோத், அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலா்கள் கோ.ஜெகன், ஆறுமுகம், மாநில துணைத் தலைவா்கள் முத்து வைத்திலிங்கம், முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், திமுகவைச் சோ்ந்த ராஜலிங்கம் தலைமையில் 50 போ் அந்தக் கட்சியிலிருந்து விலகி பாமகவில் இணைந்தனா்.

கூட்டத்தில், வருகிற 30-ஆம் தேதி பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி ஆராய்ச்சிகுப்பத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com