பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகை வழங்க அகில இந்திய கம்யூ கட்சி கோரிக்கை

கரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என

News image
Updated On :13 ஜூன் 2020, 5:31 am

DIN

கரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கண்ணுக்கு தெரியாத வெல்ல முடியாத உயிர் கொல்லியான கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மனித குலத்தேற்கு சவாலாக இருக்கிறது. இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்  உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது. 

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கரோன தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சோப்பு போட்டு கை கழுவுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்ற நிலையில் ஏழை. எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரதையும், உயிர்களையும் பாதுகாக்க வேண்டுமானால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. 

இதை கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு ரூ.7500-ம், மாநில அரசு ரூ.5000-ம் வங்கி கணக்கில் செலுத்தி உதவ வேண்டும். மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தமிழக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விட்டுள்ளார். இந்நிலையில் அவசர கதியில் ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

எனவே தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என அறிக்கையில் ஜி.பூராசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.