புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பிச்சாவரத்தில் வனத்துறை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

சிதம்பரம் அருகே பிச்சாவரத்திற்குட்பட்ட கிள்ளை கிராம தளபதி நகரில் கரோனா தொற்று ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் சுற்றுலா மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு வனத்துறை சார்பில் நிவாரணப்பொருள்கள்

News image
Updated On :29 மே 2020, 12:10 pm

DIN

சிதம்பரம் அருகே பிச்சாவரத்திற்குட்பட்ட கிள்ளை கிராம தளபதி நகரில் கரோனா தொற்று ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் சுற்றுலா மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு வனத்துறை சார்பில் நிவாரணப்பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பிச்சாவரம் வனச்சரக அலுவலர் நாகூர்மீரா சூழல் சுற்றுலா மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் 112 பேருக்கு தலா ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உல்ளிட்ட மளிகை பொருள்களை வழங்கி கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கடலூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த லட்சுமி விழிப்புணர்வு உரையாற்றினார். 

சூழல் சுற்றுலா மேலாண்மைக்குழுத் தலைவர் சின்னதுரை, கிராமத்தலைவர்கள் சின்னமணி, கோதண்டபாணி, மோகன் மற்ரும் பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிச்சாவரம் வனச்சரக வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.செல்வம், எஸ்.சரண்யா மற்றும் வனக்காவலர்கள் சி.ரமேஷ், எம்.ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.