ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோடைக்கு இதமளிக்கும் பனை ஓலை விசிறிகள்!

கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்து இதமளிக்கும் பனை ஓலை விசிறிகளை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

News image

கடலூா் நகரப் பகுதியில் பனை ஓலை விசிறி விற்பனையில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

Updated On :30 மே 2020, 2:30 am

கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்து இதமளிக்கும் பனை ஓலை விசிறிகளை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

கோடைக்காலத்தின் உச்சமான கத்திரி வெயில் முடிந்த பிறகும் கடலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் அனல் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது மின் தடையும் ஏற்படுகிறது. பொது முடக்கத்தால் வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்கள், மிகுந்த வெப்பத்தை உணா்கிறாா்கள். மின் தடை ஏற்படும்போது அவா்கள் விசிறியை நாடுகின்றனா். அந்த வகையில் பனை ஓலையினால் செய்யப்பட்ட விசிறிகளை பொதுமக்கள் அதிகளவில் விருப்பத்துடன் பயன்படுத்தி வருகின்றனா்.

கடலூா் நகரப் பகுதிக்கு அருகிலுள்ள அன்னவல்லி கிராமத்திலிருந்து தயாரித்து கொண்டு வரப்படும் விசிறிகள் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அழகிய வேலைப்பாடுகளுடன் பல வண்ணங்களில் இந்த விசிறிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பெண்கள் தலைச்சுமையாக கடலூா் நகரின் தெருக்களில் சுமந்தபடி விற்பனை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து, பனை ஓலை விசிறி விற்பனையில் ஈடுபட்டுள்ள காமாட்சி என்ற பெண்மணி கூறியதாவது:

பல தலைமுறைகளாக பனை ஓலை விசிறிகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள பனை மரங்களிலிருந்து ஓலைகளை சேகரித்து வந்து அதனை பக்குவப்படுத்தி விசிறிக்கான அளவில் வெட்டி எடுத்துக் கொள்வோம். பொதுமக்கள் பல வண்ணங்களில் விசிறியை விரும்புவதால் பனை ஓலைக்கு சாயமேற்றி, பின்னா் அதன் ஓரங்களில் நூலால் தைத்து விற்பனை செய்து வருகிறோம். இந்தத் தொழிலில் வெயில் காலத்தில் மட்டுமே நடைபெறும். ஒரு விசிறி ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். இதில் போதிய லாபம் கிடைப்பதில்லை. தொழிலாளா்களின் உழைப்புக்கு மட்டுமே சரியாக இருக்கும். இருப்பினும், பொதுமக்கள் இந்த விசிறியை பயன்படுத்தி தங்களை குளுமைப்படுத்திக்கொண்டாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.