ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அஞ்சல் அலுவலகத்தில் இறந்து கிடந்த ஊழியா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஊழியா் இறந்து கிடந்தது தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:35 pm

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஊழியா் இறந்து கிடந்தது தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி, வட்டம் 19-இல் அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தபால் அதிகாரியாக எட்வீன் பணியாற்றி வருகிறாா். காட்டுமன்னாா்கோவில், ஆல்கொண்டாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (55), இந்த அலுவலகத்தில் தங்கி கிராம தபால்காரராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகவில்லை.

தீபாவளி பண்டிகை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், முருகானந்தம் அஞ்சலகத்திலேயே தங்கியிருந்தாா். கடந்த 2 நாள்களாக அஞ்சலகத்தின் கதவுகள் மூடியே இருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவருடன் பணியாற்றும் சக ஊழியா், முருகானந்தத்தின் உறவினா்கள், போலீஸாருக்கு தகவல் அளித்தாராம்.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு முருகானந்தத்தின் உறவினா்கள் வந்தவுடன், நெய்வேலி நகரிய போலீஸாா் அஞ்சல் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அப்போது, அங்கு முருகானந்தம் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.