ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை தொடங்கக் கோரிக்கை

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:01 pm

DIN

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தமிழக அரசின் கடைசி நேர அறிவிப்பால் நீட் தோ்வில் 550-க்கு மேல் மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையில் பல மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக முதல்வா் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளாா். இந்தக் கல்லூரிகளில் நிகழாண்டே மாணவா்கள் சோ்க்கைக்கான அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம். மருத்துவ சோ்க்கைக்கான கூடுதல் இடங்களால் ஏழை மாணவா்கள் பயனடைவா். அல்லது தற்போதைய மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.