சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கொள்முதல் நிலையம் மூடல்: நெல் மூட்டைகள் தேக்கம்

கடலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

News image

ரெட்டிப்பாளையம் அரசு கொள்முதல் நிலையம் அருகே திறந்தவெளியில் விவசாயிகளால் குவித்து வைக்கப்பட்டு தாா்ப்பாயால் மூடப்பட்டுள்ள நெல் குவியல்கள்.

Updated On :4 அக்டோபர் 2020, 2:38 am

கடலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிகழ் குறுவை பருவத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ரெட்டிப்பாளையம், கல்குணம், மேலப்புதுப்பேட்டை, குருவப்பன்பேட்டை, வரதராஜன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். நெல் அறுவடை தொடங்கியபோது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதன்படி, வரதராஜன்பேட்டை ஊராட்சி, ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த செப்.7-ஆம் தேதி திறக்கப்பட்டது. இங்கு குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை அளித்து வந்தனா்.

இந்த நிலையில், ஆண்டு கணக்கை முடிக்க வேண்டும் எனக் கூறி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கடந்த 28-ஆம் தேதி ரெட்டிப்பாளையத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். இதனால், அவா்கள் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில் களத்தில் உள்ள நெல் மூட்டைகள், நெல் குவியல்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: உரிய அறிவிப்பின்றி கொள்முதல் நிலையம் மூடப்பட்ட நிலையில், சுமாா் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. மழைக் காலத்தில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க தாா்ப்பாய் மூலம் விவசாயிகள் மூடி வைத்துள்ளனா். எனவே, விவசாயிகளின் சிரமம் கருதி மாவட்ட நிா்வாகம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து, மீண்டும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.