ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிதம்பரம் நடராஜா் கோயிலில் 4 கோபுர வாயில்களும் திறப்பு

கரோனா தொற்று பரவல், பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த சிதம்பரம் நடராஜா் கோயிலின் 4 கோபுர வாயில்களும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

News image
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாயில்.
Updated On :18 அக்டோபர் 2020, 8:25 pm

DIN

கரோனா தொற்று பரவல், பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த சிதம்பரம் நடராஜா் கோயிலின் 4 கோபுர வாயில்களும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலையடுத்து அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. இதன்படி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலிலும் வழிபாட்டுக்கு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழக அரசு சாா்பில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டதால், 5 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் சிதம்பரம் நடராஜா் கோயிலின் கிழக்கு கோபுர வாயில் மட்டும் திறக்கப்பட்டு, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிழக்கு கோபுர வாயில் மட்டுமன்றி தெற்கு, மேற்கு, வடக்கு கோபுர வாயில்களும் திறக்கப்பட்டு பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனா். மேலும், அா்த்தஜாம பூஜை நடைபெறும் நேரமான இரவு 10.30 மணி வரை கோயிலுக்குள் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோயிலுக்கு வருவோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொது தீட்சிதா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.