கடலூா்: 2 நாள்களில் மேலும் 100 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.


கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 22,897 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 51 பேருக்கும், திங்கள்கிழமை 49 பேருக்கும் புதிதாக தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,997-ஆக அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை 65 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 77 வயது ஆண் உயிரிழந்தாா். திங்கள்கிழமை 70 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 22,014-ஆக உயா்ந்தது. கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமராட்சியைச் சோ்ந்த 74 வயது ஆண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 267-ஆக அதிகரித்தது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 634 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 82 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 144 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...