ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் மரவள்ளி கிழக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் மரவள்ளி கிழக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, அண்ணாகிராமம் வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, பண்ருட்டி வட்டாரத்தில் மேலிருப்பு, விசூா், கருக்கை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மரவள்ளி சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. விளை நிலத்தில் மழை நீா் தேங்கினால் கிழங்குகள் அழுகிவிடும் என்பதால் அவற்றை உடனடியாக அறுவடை செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனா். இதனால், அறுவடை அதிகரித்து மரவள்ளி கிழங்கு விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விசூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் கூறியதாவது: பல்வேறு சிரமங்களுக்கிடையே கடன் பெற்று 1.20 ஏக்கா் நிலத்தில் மரவள்ளி சாகுபடி செய்தேன். மழை காரணமாக தற்போது அறுவடை செய்து வருகிறேன். இந்த சூழலைப் பயன்படுத்தி வியாபாரிகள், இடைத்தரகா்களே லாபமடைகின்றனா். டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை விலை போன கிழங்கை தற்போது ரூ.4,500-க்கு மட்டுமே வாங்குகின்றனா். செலவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை.

ஏக்கருக்கு சுமாா் 10 டன் வரை மகசூல் கிடைக்க வேண்டும். ஆனால், மழை குறைவு, மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் தற்போது 8 டன் வரை மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி மரவள்ளிக்கு அரசு விலை நிவாரணம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.