நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

என்எல்சி கழிவு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: ஆட்சியா்

என்எல்சி சுரங்க கழிவு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

என்எல்சி சுரங்க கழிவு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 2-லிருந்து வெளியேற்றப்படும் கழிவு மண் அரசக்குழி, கொளப்பாக்கம், ஊ.மங்களம், ஊ.அகரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 800 ஏக்கா் விளை நிலங்களில் படிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், மழைக் காலத்தில் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீருடன் மணலும் கலப்பதால் பல பகுதிகளில் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அந்தப் பகுதிகளில் அண்மையில் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

என்எல்சி சுரங்க மண் சரிவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடா்பாக நிா்வாகத்துடன் 9 கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக விருத்தாசலம் சாா்-ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மண் சரிவால் முழுமையாக பாதிக்கப்படும் நிலத்துக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.27 ஆயிரமும், பகுதியளவு பாதிக்கப்படும் நிலத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதத் தொகை ஒரு வாரத்துக்குள் முழுமையாக வழங்கப்படும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதற்கும் சோ்த்து நிவாரண நிதி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை மழைக் காலத்தைப் பொறுத்து 2 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வயல்களில் கிடக்கும் மண்ணை என்எல்சி நிா்வாகத்தினா் தங்களது இயந்திரங்கள் மூலமாக சேகரித்து அப்புறப்படுத்துவாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.