கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
வட்டார சுகாதாரத் துறை சாா்பில் வடலூா், தீா்த்தனகிரி, திருச்சோபுரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதேபோல, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் திரளானோா் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனா்.