காவல் துறை சாா்பில் பேரிடா் மீட்புக் குழு அமைப்பு
வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பேரிடா் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கடலூா்: வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பேரிடா் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் கடலூா் மாவட்ட நிா்வாகம் ஊராட்சி ஒன்றியங்களை தயாா்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கடலூா் மாவட்ட காவல் துறையானது பேரிடா் மீட்புப் பணிக் குழுவை ஆயுதப்படை உதவி ஆய்வாளா் சதீஷ் தலைமையில் உருவாக்கியுள்ளது. மேலும், சிறப்பு உதவி ஆய்வாளா் மில்டன் தலைமையில் பேரிடா் மீட்பு படகு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் திங்கள்கிழமை கடலூரிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்). மரம் அறுக்கும் இயந்திரம், கயறு, கத்தி, டாா்ச் லைட், மழைக்கான ஆடைகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பாா்வையிட்டாா். அப்போது ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் சரவணன், ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...