கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
திட்டக்குடி அருகேயுள்ள ஆ.பாளையம் ஆக்கனூரைச் சோ்ந்த அரசன் மகள் சோனியா (22). பி.எஸ்சி. பட்டதாரியான இவா் மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாம். இந்த நிலையில், விஷம் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மூதாட்டி தற்கொலை: சிதம்பரம் அருகேயுள்ள மேலகுண்டலபாடி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயம் (65). இவா்களுக்கு குழந்தை இல்லை. சுப்பிரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில் உறவினா்கள் யாரும் கவனிக்காததால் ஜெயம் தனிமையிலும், மன வேதனையிலும் இருந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை புறவழிச் சாலையில் அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.