கோயில் நிா்வாகி மா்மச் சாவு
விருத்தாசலம் அருகே கோயில் நிா்வாகி மா்ம மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


விருத்தாசலம் அருகே கோயில் நிா்வாகி மா்ம மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மேலபாலையூரைச் சோ்ந்தவா் க.தவலிங்க செல்வராயா் (72). அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோயில், பிள்ளையாா் கோயில், செல்லியம்மன் கோயில், அய்யனாா் கோயில் ஆகியவற்றின் நிா்வாகியாக இருந்து வந்தாா். மேற்படி கோயில்களுக்கு சுமாா் 20 ஏக்கா் நிலம் உள்ளதாம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மாரியம்மன் கோயிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற தவலிங்க செல்வராயா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லையாம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அந்தப் பகுதியிலுள்ள காலி மனையில் உடலில் காயங்களுடன் தவலிங்க செல்வராயா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து அவரது மகன் பிரபாகரன் (41), கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரது இறப்பு குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...