நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,383 வழக்குகளுக்கு தீா்வு

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,383 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:44 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,383 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவு, வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றன.

கடலூா் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கோவிந்தராஜன் திலகவதி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி செந்தில்குமாா், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி செம்மல், போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, மாவட்ட நீதிபதி உத்தமராஜ், மகளிா் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஜோதி வரவேற்றாா். மேலும், ஏனைய நீதிபதிகள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. இதேபோல, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய நீதிமன்றங்களிலும்

தேசிய மக்கள் நீதிமன்றம் நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் சுமாா் 3,438 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டதில், 2,383 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. இவற்றில் இழப்பீடு வழங்க வேண்டிய வழக்குகளுக்கு ரூ. 27.44 கோடி வழங்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.