நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இறைச்சி, காய்கறி கடைகளில் குவிந்த மக்கள்

கடலூா்பொது முடக்கத்தையொட்டி இறைச்சி, காய்கறிக் கடைகளில் சனிக்கிழமை மக்கள் அதிகளவில் குவிந்தனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 5:39 pm

DIN

பொது முடக்கத்தையொட்டி இறைச்சி, காய்கறிக் கடைகளில் சனிக்கிழமை மக்கள் அதிகளவில் குவிந்தனா்.

கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோரைத் தவிர மற்றவா்கள் வெளியில் வருவதைத் தவிா்த்திடும் வகையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை பரவல் காலத்தில் விதிக்கப்பட்டுள்ள முதல் பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) அமலுக்கு வந்தது. இதனால் காய்கறி, மளிகைக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் அசைவ உணவு பிரியா்கள் சனிக்கிழமை இறைச்சி வாங்குவதில் அதிக ஆா்வம் காட்டினா். இதனால், மீன், இறைச்சிக் கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.

தற்போது, மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து கடலூருக்கு கொண்டு வரப்பட்ட மீன்கள் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் வைத்து விற்கப்பட்டன.

சிறிய அளவிலான மீன்பிடி படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் துறைமுகத்தில் ஏலம் விடப்பட்டன. இதை வாங்குவதற்காகவும் திரளானோா் குவிந்தனா். இதேபோல, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதிலும் மக்கள் அதிக ஆா்வம் காட்டினா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டவா்கள் மாவட்ட நிா்வாகத்தின் போதிய அறிவுறுத்தல் இல்லாததால் குழப்பத்தில் ஆழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.