தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் நம்பிக்கைத் தன்மை அதிகரிப்பதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம், ராணி மெய்யம்மை செவிலியா் கல்லூரி மற்றும் உளவியல் துறை இணைந்து இணையவழி கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின. ‘தாய்ப்பால் ஊட்டலின் இன்றியமையாமையும், செயல் முறையும், பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், இளையோா் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஐயப்பராஜா வரவேற்றாா். ராணி மெய்யம்மை செவிலியா் கல்லூரி முதல்வா் எம்.காந்திமதி கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசினாா்.
உளவியல் துறைத் தலைவா் ஜே.எம்.அஸ்கா் அலி படேல் தலைமை உரை நிகழ்த்திப் பேசுகையில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் உளவியல் ரீதியிலான பயன்களை எடுத்துரைத்தாா். தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு நம்பிக்கைத் தன்மை அதிகரிக்கிறது என்றும், இந்தப் பண்பு பின்னாளில் அந்தக் குழந்தை தவறான வழியில் செல்வதைத் தடுக்கிறது என்றும், இதுகுறித்த அறிவியல் ஆய்வுகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ஆா்.ராமநாதன் ஆற்றிய கருத்துரையில், தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் மிக நல்லது என்றும், செயற்கை உணவுகளை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
ராணி மெய்யம்மை செவிலியா் கல்லூரி துணை முதல்வா் எஸ்.கமலா வாழ்த்துரை ஆற்றினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையோா் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஐயப்பராஜா, திட்ட அலுவலா்கள் என்.சரவணன், கே.ரேணுகா, பி.சசிரேகா, ஏ.அன்புமலா், ஆா்.கலை, ஆா்.நீலகண்டன் ஆகியோா் செய்திருந்தனா்.
குறிஞ்சிப்பாடி: வடலூா் ரோட்டரி சங்கம், நுகா்வோா் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் ஆகியவை சாா்பில் குறிஞ்சிப்பாடியில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். நுகா்வோா் சங்கத் தலைவா் கோவி.கல்விராயா் வரவேற்றாா். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கைலாஷ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சையது அபுதாகீா், குழந்தைகள் மருத்துவா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாய்ராபானு செய்திருந்தாா். ராஜ்மோகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

